வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட.
வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித்திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் அவர்கள் கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார்.
[தொகு] நாட்டுப்பற்றாளர் விருது
தமிழீழ விடுலைப் போராட்டத்திற்கு பங்களிப்பை செய்த படைப்பாளர், கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களுக்கு தமிழீழ விடுலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்[தொகு] வெளிவந்த நூல்கள்
- அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
- காற்றுவெளிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
- காலத்துயர் (கவிதைத் தொகுதி)
- நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
- உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)
- வாசிகம் (2006)
[தொகு] குரல்
- சு.வி யின் குரலில் அவரது "தைப்பாவாய்" பாடல் (file info) — உலாவியின் உள் இயக்கு (beta)
-
- கோப்புகளை இயக்குவதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
- சு. வில்வரெத்தினம் தன் குரலில் பாடிய நீலாவணன் இன் பாடல் ஓ வண்டிக்காரா.... . (file info) — உலாவியின் உள் இயக்கு (beta)
-
- கோப்புகளை இயக்குவதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
- சு.வில்வரத்தினத்தின் பாடலுக்கு இசை நரேன் சுரேஸ்குமார்,பாடியவர் இசைக்கலைமாமணி சுமங்கலா சன்முகநாதன் . (file info) — உலாவியின் உள் இயக்கு (beta)
-
- கோப்புகளை இயக்குவதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
- அகங்களும் முகங்களும் - நூலகம் திட்டம்
- காற்றுவழிக் கிராமம் - நூலகம் திட்டம்
- உயிர்த்தெழும் காலத்திற்காக - நூலகம் திட்டம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen